அனைத்து அமைச்சர்களையும் வரவைத்த மோடி.. கூட்டணி தலைவர்களுடன் பாஜக அவசர ஆலோசனை!
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. நேற்று முதல்நாள் தேர்தல் முடிந்துள்ள நிலையில் வரும் மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது வரை லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் எல்லாம் பாஜக கட்சியே வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
எதிர்க்கட்சிகள்
இதனால் 21 எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளது. இவர்கள் எல்லோரும் வரிசையாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள். இன்று 22 எதிர்க்கட்சிகள் சேர்ந்து டெல்லியில் ஆலோசனை நடத்தினார்கள்.
கூட்டம்
இந்த நிலையில் தற்போது மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லி பாஜக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனைக்கு தலைமை தாங்குகிறார்.
கூட்டணி தலை
பாஜக அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி கட்சி அமைச்சர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். அதேபோல் தற்போது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
பேசுவார்கள்
இந்த ஆலோசனையில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து ஆலோசிக்க இருப்பதாக தெரிவிக்கிறார்கள். முக்கியமாக தேர்தலுக்கு பின் மாநில கட்சிகளை கூட்டணிக்குள் வர வைப்பது எப்படி என்பது குறித்து இவர்கள் ஆலோசிக்க உள்ளதாக செய்திகள் வருகிறது.