ஹாய் ப்ரோ.. மோடி எனக்கு அண்ணன் மாதிரி.. நான் அவருக்கு தம்பி.. சவுதி சல்மான் பாசமழை!
பிரதமர் மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி என்று சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி என்று சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
ராணுவம் முதல் பாதுகாப்பு வரை பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வந்துள்ளார். நேற்று இரவுதான் அவர் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் சல்மானுக்கு மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நட்பு
சல்மான் தனது பேச்சில், இந்தியாவும் சவுதியும் வரலாறு முழுக்க நெருக்கமாக இருந்த நாடுகள். பல நாடுகள் உருவாகும் முன்பே நாம் நட்பு நாடுகள். இந்திய மக்கள் எங்களுக்கு எப்போதும் நண்பர்கள். சவுதியை உருவாக்குவதில் இந்தியா கடந்த 70 வருடமாக பாடுபட்டு இருக்கிறது.
நிறைய உதவிகள்
சவுதியும் இந்தியாவிற்காக நிறைய பணிகளை செய்து இருக்கிறது. இந்தியா சவுதி இடையிலான உறவு எப்போதும் போல தொடர வேண்டும். இரண்டு நாடுகளின் நன்மைக்காகவும், பலனுக்காகவும் இரண்டு நாடுகளும் எப்போதும் நட்புடன் இருக்க வேண்டும்.
ஒப்பந்தம்
பிரதமர் மோடி, மற்றும் என்னுடைய தலைமையின் கீழ் இந்தியா சவுதி உறவு மேம்படும் என்று எதிர்பார்க்கிறோம். உலகின் மிக முக்கியமான நாடுகளாக இரண்டு நாடுகளும் வளரும். நாம் செய்யும் ஒப்பந்தங்கள் இரண்டு நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும்.
அண்ணன்
பிரதமர் மோடியின் பணிகளை நான் போற்றுகிறேன். அவர் எனக்கு அண்ணன் போன்றவர். நான் அவருக்கு தம்பி போன்றவர், எங்களின் நட்பு மிக மிக வலிமையானது என்று சல்மான் தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்.