டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 வருடங்களில் எந்த பிரதமரும் செய்யாத சாதனை.. மோடியின் பெருமைகளில் இது முக்கியமானது!

பிரதமர் மோடி தனது ஐந்து வருட ஆட்சியில் இதுவரை ஒரே ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி தனது ஐந்து வருட ஆட்சியில் இதுவரை ஒரே ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை. இந்தியாவில் முதல்முறை ஒரு பிரதமர் இப்படி ஆட்சி செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அரியணையில் ஏறினார். ராமர் கோவில் கட்டுவது தொடங்கி, கங்கை நதியை சுத்தம் செய்வது வரை. ஆனால் அவர் கொடுத்த பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

அதேசமயம் மக்கள் எதிர்பார்க்காத டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களை கொண்டு மக்களை சிக்கலுக்கு உள்ளாக்கினார்.

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. புதுப்பொலிவுடன் 5-ஆவது முறையாக ரேபரேலியில் களமிறங்குகிறார் சோனியா! தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. புதுப்பொலிவுடன் 5-ஆவது முறையாக ரேபரேலியில் களமிறங்குகிறார் சோனியா!

வாக்குறுதி கொடுத்தார்

வாக்குறுதி கொடுத்தார்

அதேபோல் பிரதமர் மோடி கொடுத்த மிக முக்கியமான வாக்குறுதி ஒன்றை பலரும் மறந்து இருப்பார்கள். அதாவது, ஆட்சிக்கு வந்தால் நான் செய்தியாளர்களை சந்திப்பேன். வாரம் ஒருமுறையாவது செய்தியாளர்களை கண்டிப்பாக சந்திப்பேன். ஆட்சி திட்டங்களை நேரடியாக விளக்குவேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த இந்த 5 வருடங்களில் ஒருமுறை கூட செய்தியர்களை சந்திக்கவில்லை. நல்ல விஷயம் நடந்த போதும் சரி, புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட மிக மோசமான விஷயங்கள் நடந்த போதும் கூட, பிரதமர் மோடி செய்தியர்களை சந்திக்கவில்லை. எந்த மிக முக்கியமான விஷயங்களிலும் அவர் செய்தியர்களிடம் பேசவே இல்லை.

பிரச்சாரம் செய்தார்

பிரச்சாரம் செய்தார்

பிரதமர் மோடி பிரச்சார மேடைகளில் மட்டுமே அதிகம் பேசினார். இந்தியாவில் பிரதமராக இருந்த போது அதிக முறை பிரச்சார மேடைகளில் பேசிய தலைவர்களில் மோடியும் ஒருவர். அதேபோல் யாரும் கேள்வி கேட்க முடியாத, ரேடியோ உள்ளிட்ட ஊடகங்களில் மட்டுமே மோடி அதிகமாக பேசினார்.

ஒரே பிரதமர்

ஒரே பிரதமர்

அதேபோல் ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்காமல் ஆட்சியை முடித்த ஒரே பிரதமர் என்ற நற்பெயரையும் பிரதமர் மோடி பெற்று இருக்கிறார். இந்திய பிரதமர்கள் எல்லோரும் ஒருமுறையாவது செய்தியாளர்களை, சில நொடிகளாவது சந்தித்து பேசி இருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி அப்படி இதுவரை பேசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
PM Modi is the first Prime Minister not to give a single press meet during the ruling period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X