நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன் நீட்டிப்பா? பிரதமர் மோடி அமித்ஷா உடன் ஆலோசனை
டெல்லி: நாடு முழுவதும் 5வது முறையாக லாக்டவுனை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.,
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்று இருப்பதாக கூறப்படுகிறது.
லாக்டவுன் குறித்து ஏற்கனவே மாநிலங்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தியிருந்தார் இந்த சூழலில் தான் பிரதமர் மோடி, அமித் ஷாவை அழைத்து ஆலோசித்து வருகிறார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் லாக்டவுன் அமலில் உள்ளது. லாக்டவுன்கள் இதுவரை நான்கு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசியாக மே 17ம்தேதியில் இருந்து மே 31ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது.
அரசின் வழியை பின்பற்றினால்தான் கொரோனாவை தடுக்க முடியும்.. முதல்வர்
மே 31ம் தேதி லாக்டவுன் முடிய உள்ள நிலையில் மாநிலங்களின் கருத்துக்கள் அடிப்படையில் லாக்டவுன் நீட்டிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. ஆனால் நிறைய தளர்வுகள் இருக்கும் என்று தெரிகிறது. கொரோனா அதிகம் உள்ள சென்னை , மும்பை உள்பட குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.