ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை
டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று திடீரென சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி லடாக் எல்லைப் பகுதிகளில் நிலவரங்களை ஆய்வு செய்தார். எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடருகின்றன.
இந்த நிலையில் எல்லைப் பகுதிகளுக்கு பிரதமர் மோடி திடீரென பயணம் மேற்கொண்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அங்கு ராணுவ வீரர்களிடையே எழுச்சிமிக்க உரையாற்றினார் மோடி.
ராணுவ வீரர்களை, மோடி சந்தித்த மருத்துவமனை பற்றி வெளியான வதந்திகள்.. 'தீய நோக்கம்' என ராணுவம் கண்டனம்
இதனைத் தொடர்ந்து இன்றுடெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பான படங்களை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மாளிகை, தேசிய, சர்வதேச விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
Comments
india china narendra modi ram nath kovind இந்தியா சீனா எல்லை பிரச்சனை நரேந்திர மோடி ராம்நாத் கோவிந்த்
English summary
Prime Minister Narendra Modi called on President Kovind and briefed him on the issues of national and international importance at Rashtrapati Bhavan today.