டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரியான நேரத்தில் இரு தடுப்பூசிகள்.. இரண்டும் மேட் இன் இந்தியா.. பிரதமர் மோடி பெருமிதம்!

Google Oneindia Tamil News

டெல்லி: சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசிகள் கிடைத்துள்ளன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணியை இன்று காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்தார். நாட்டில் 3000 மையங்களில் அவர் தொடங்கி வைத்தார்.

PM Modi says we have got two coronavirus vaccines

அப்போது பிரதமர் மோடி பேசுகையில் நாட்டு மக்களுக்கு நன்றி. சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசிகள் கிடைத்துள்ளன.
பொதுவாக, ஒரு தடுப்பூசி தயாரிக்க பல ஆண்டுகள் ஆகும், ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில், ஒன்று அல்ல, இரண்டு 'மேட் இன் இந்தியா' தடுப்பூசிகள் தயாராக உள்ளன, பிற தடுப்பூசிகளின் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

உலகின் மெகா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து போடும் பணி.. இந்தியாவில் தொடங்கியது! உலகின் மெகா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து போடும் பணி.. இந்தியாவில் தொடங்கியது!

தடுப்பூசியை உருவாக்கியிருப்பது இந்தியர்களின் அறிவாற்றலை உலகிற்கு உணர்த்துகிறது. உலகம் முழுவதும் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தியாகியுள்ளது. மனித குலம் ஒன்றை நினைத்துவிட்டால் அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல.

நாட்டு மக்களின் நலனுக்காக உழைக்கும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படுகிறது. ராணுவ வீரர்களுக்கும் போலீஸாருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களுக்கான முழு செலவை மத்திய அரசே ஏற்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

English summary
PM Modi says we have got two coronavirus vaccines which are made in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X