பாரத் மாதா கி ஜே' சொல்ல கூட வெட்கப்படுகிறார்.. மன்மோகன் சிங் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு
டெல்லி: ஒரு சிலர் 'பாரத் மாதா கி ஜே' கூட சொல்ல தயங்குகிறார்கள் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக தாக்கினார்.
கடந்த வாரம் டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர் பேசுகையில் , தேசியவாத யோசனையும், "பாரத் மாதா கி ஜே" முழக்கமும், இந்தியாவின் லட்சக்கணக்கான குடியிருப்பாளர்களையும் குடிமக்களையும் ஒதுக்கி வைப்பதற்காக போர்க்குணமிக்க மற்றும் முற்றிலும் உணர்ச்சிபூர்வமான யோசனையை உருவாக்குவதற்காக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன" என்று கூறினார்.
இந்நிலையில் டெல்லி வன்முறை விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பி வரும் நிலையில் பாஜக எம்பிக்களை இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது அவர் அமைதி, நல்லிணக்கம், மற்றும் ஒற்றுமையை நாட்டுமக்களிடம் பாஜக எம்பிக்கள் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
வேகமாக வந்த கார்.. ஓடி வந்த பாதுகாப்பு அதிகாரிகள்.. பஞ்சர் செய்த ஸ்பைக்ஸ்.. நாடாளுமன்றத்தில் பரபர!
அதைத்தொடர்ந்து பேசிய மோடி, "'பாரத் மாதா கி ஜே' முழக்கம் சிலருக்கு வசதியாக இல்லை . காங்கிரஸ் தலைவர்கள் தேசியவாத முழக்கத்தை சொல்ல வெட்கப்படுகிறார்கள்.ஜவஹர்லால் நேரு சுதந்திர இயக்கத்திற்குக் கண்டுபிடித்த முழக்கம் இது. சுதந்திர இயக்கத்தின் போது கூட, பாரத மாதா முழக்கத்தைப் பற்றி சிலர் அவ்வாறே உணர்ந்தார்கள்" என்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை தாக்கினார்-