நாளை சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடி காலை 6.30 மணிக்கு உரை
டெல்லி: 7-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை காலை 6.30 மணிக்கு உரையாற்ற உள்ளார்.
ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் யோகா தொடர்பான நிகழ்ச்சிகள் நாளை நடத்தப்பட உள்ளன.
இது தொடர்பாக பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நாளை ஜூன் 21ம் தேதி, 7வது யோகா தினத்தை நாம் கொண்டாடுகிறோம். 'ஆரோக்கியத்திற்கு யோகா' என்பதுதான் இந்தாண்டின் கருப்பொருள்.
இது உடல் மற்றும் மனநலத்துக்கு யோகா செய்வதில் கவனம் செலுத்துகிறது. நாளை காலை சுமார் 6.30 மணிக்கு, நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் நான் உரையாற்றவுள்ளேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Comments
English summary
Prime Minister Narendra Modi will address the 7th International Yoga Day programme tomorrow, 21st June at 6.30 AM.