21-ம் நூற்றாண்டுக்கான அடித்தளமே புதிய கல்வி கொள்கை- பிரதமர் மோடி
டெல்லி: புதிய கல்வி கொள்கையானது 21-ம் நூற்றாண்டுக்கான அடித்தளம் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. அதேநேரத்தில் புதிய கல்வி கொள்கையின் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல அம்சங்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
எம்.பில் படிப்பு ரத்து உள்ளிட்ட உயர் கல்வித்துறை தொடர்பான அம்சங்களுக்கு ஆதரவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே மத்திய கல்வி அமைச்சகமும் பல்கலைக் கழக மானிய குழுவும் இணைந்து புதிய கல்வி கொள்கையின் கீழ் உயர் கல்வியில் புதிய சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸிங் மூலம் உரையாற்றினார். பிரதமர் மோடி தமது உரையில் கூறியதாவது:
Recommended Video
எப்படி யோசிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது புதிய கல்விக் கொள்கை.. பிரதமர் மோடி புகழாரம்
பல ஆண்டுகளாக நமது கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை. தற்போதைய மாற்றமானது 21-ம் நூற்றாண்டுக்கான அடித்தளம். சர்வதேச மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டது.
ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தேவை என்பதை வலியுறுத்துகிறது. கல்வியையும் ஆராய்ச்சியையும் ஒருங்கிணைக்க கூடிய கல்வி முறை.
இது பக்க சார்பு இல்லாத ஒரு கல்வி கொள்கை. நாட்டு மக்கள் அனைவரும் இதனை ஏற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றார்.