ஜெயலலிதா சிறந்த நிர்வாகி, கருணை உள்ளம் கொண்டவர்- மோடி புகழாரம்
டெல்லி: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி என்றும் கருணை உள்ளம் கொண்டவர் என்றும் அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.
இன்று ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அதிமுகவினர் 71 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளனர். மேலும் பல்வேறு நலத்திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் நண்பரான பிரதமர் மோடியும் அவரது பிறந்த நாளில் தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழக வளர்ச்சிக்கு ஜெ. ஆற்றிய தொண்டு பல தலைமுறைகளுக்கு நினைவில் இருக்கும்.
Tributes to Jayalalithaa Ji on her birth anniversary. Her contribution towards the development of Tamil Nadu will be remembered for generations. A fine administrator and compassionate leader, her welfare measures benefitted countless poor people.
— Narendra Modi (@narendramodi) February 24, 2019
ஜெயலலிதா சிறந்த நிர்வாகி, கருணையுள்ளம் கொண்டவர். ஜெயலலிதாவின் நலத்திட்டங்களால் எண்ணற்ற ஏழை மக்கள் பலனடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.