தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம்.. பாரதி பிறந்த நாளுக்கு மோடி தமிழில் வாழ்த்து!
தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்று கூறிய மகா கவிஞர் பாரதியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தமிழில் டிவிட் செய்துள்ளார்.
டெல்லி: தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்று கூறிய மகா கவிஞர் பாரதியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தமிழில் டிவிட் செய்துள்ளார்.
தமிழ் கவிஞரும், எழுத்தாளரும், விடுதலை போராட்ட வீரருமான பாரதியாரின் பிறந்த நாள் இன்று. அவரின் 136வது பிறந்த நாள் ஆகும் இது. அவர் 1882 டிசம்பர் 11ம் தேதி பிறந்தார். இதனால் தமிழகம் முழுக்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அவரின் கவிதைகள், கதை நினைவு கூறப்படுகிறது.
பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும் வகையில் பல கட்சியை சேர்ந்தவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். தற்போது பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அதுகுறித்து தமிழில் டிவிட் செய்துள்ளார்.
பிரதமர் மோடி தனது டிவிட்டில், மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.
மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.
— Narendra Modi (@narendramodi) December 11, 2019
சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது
சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது
— Narendra Modi (@narendramodi) December 11, 2019