அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.. மோடி, ராகுல் ட்விட்டரில் வாழ்த்து
டெல்லி: ரம்ஜான் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முஸ்லீம் சகோதரர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முன்னதாக ரம்ஜான் நோன்பு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கியது.
நோன்பை நேற்று முடித்து கொள்ளுமாறு தலைமை காஜி கூறியதை அடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முஸ்லீம் சகோதரர்களுக்கு அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் என அனைவரும் வாழ்த்துச் செய்திகளை பரிமாறி கொண்டுள்ளனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ரம்ஜான் வாழ்த்துகள். இந்த நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடனும் வாழட்டும் என மோடி தெரிவித்துள்ளார்.
அது போல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துச் செய்தியில் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டங்கள்- மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் இல்லை