டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்கள் ஒவ்வொரு ஓட்டும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும்- கேதார்நாத்தில் இருந்தபடியே மோடி உருக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: உங்கள் ஒவ்வொரு ஓட்டும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் என உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்தபடியே பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக தெரிவித்தார்.

ஆன்மிக சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் சிவனை தரிசனம் செய்ய சென்றுள்ளார். கேதார்நாத்தில் மலை உச்சியில் உள்ள குகையில் விடிய விடிய தியானம் செய்தார்.

PM Narendra Modi asks all to vote for nation

இதையடுத்து தியானம் முடித்துவிட்டு வெளியே வந்த மோடி முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். இதைத் தொடர்ந்து அவர் பத்ரிநாத்துக்கும் செல்லவுள்ளார்.

இந்த நிலையில் இன்று இறுதி கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அவரது தொகுதியான வாரணாசிக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

கேதார்நாத்தில் இருந்த படியே பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு டுவிட்டரில் பதிவை போட்டுள்ளார். அவர் கூறுகையில் இன்று 2019-ஆம் ஆண்டுக்கான இறுதி கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

PM Narendra Modi asks all to vote for nation

பிரஸ் மீட்டில் வந்த சிக்னல்.. ஓரம்கட்டப்படும் மோடி.. பிரதமர் பதவிக்கு அடிபோடும் அமித் ஷா? பிரஸ் மீட்டில் வந்த சிக்னல்.. ஓரம்கட்டப்படும் மோடி.. பிரதமர் பதவிக்கு அடிபோடும் அமித் ஷா?

அனைவரும் வாக்களித்து வாக்குப் பதிவில் சாதனையை ஏற்படுத்த வேண்டும். உங்களின் ஒரு ஓட்டு வருங்காலங்களில் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும். முதல் முறை வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களிப்பர் என நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

English summary
PM Narendra Modi in his twitter says that Today is the final phase of the 2019 Lok Sabha elections. I urge all those voting in this phase to vote in record numbers. Your one vote will shape India’s development trajectory in the years to come. I also hope first time voters vote enthusiastically.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X