மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள்.. பிரதமர் மோடி, சோனியா மரியாதை
டெல்லி: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில் அன்பார்ந்த காந்திக்கு எனது அஞ்சலி. காந்தியின் 150ஆவது பிறந்தநாளின் போது மனித இனத்திற்கு அவர் கடைசி வரை ஆற்றிய பங்கிற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.
राष्ट्रपिता महात्मा गांधी को उनकी 150वीं जन्म-जयंती पर शत-शत नमन।
— Narendra Modi (@narendramodi) October 2, 2019
Tributes to beloved Bapu! On #Gandhi150, we express gratitude to Mahatma Gandhi for his everlasting contribution to humanity. We pledge to continue working hard to realise his dreams and create a better planet. pic.twitter.com/4y0HqBO762
அவரது கனவுகள் நனவாக புதிய ஒரு தேசத்தை உருவாக்கவும் நாம் கடினமாக உழைப்போம் என உறுதிமொழி ஏற்போம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார்.