சுய சார்புதான் இனி இந்தியாவின் தாரக மந்திரம்- சுதந்திர தினத்தில் மோடி உரை
டெல்லி: இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தையொட்டி, ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
பிரதமர் மோடியின் உரை மற்றும் விழா தூர்தர்ஷனின் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலால், இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அளவு குறைக்கப்பட்டன.
செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், காலை 7.30 மணிக்கு, பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை தொடங்கியது.
Newest First Oldest First
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் முதல்வர் பழனிச்சாமி சுதந்திர தின விழாவில் பேச்சு.
அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன் - முதல்வர்.
சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை.
பன்முகத் தன்மைதான் இந்தியாவின் பலம் -பிரதமர் மோடி.
இந்தியாவின் ஒற்றுமை உலகத்துக்கே பாடம்- மோடி பேச்சு.
இந்தியாவை தொடர்ந்து ஆளலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது
நமது ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள்.
தியாகம் செய்வதற்கு இந்தியர்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரை
Comments
English summary
On the occasion of India's 74th Independence Day, Prime Minister Narendra Modi will address the nation on today from the Red Fort in Delhi. Prime Minister Modi's speech and ceremony will be telecast live on Doordarshan.