திருக்குறளை தாய்லாந்து மொழியில் வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: திருக்குறளை தாய்லாந்து மொழியில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
சவுதி அரேபியா பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்த பிரதமர் மோடி, இன்று முதல் 3 நாட்கள் பயணமாக தாய்லாந்து செல்கிறார். அங்கு ஆசியான் மாநாடு, கிழக்காசிய மாநாடு, கூட்டு பொருளாதார மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்கிறார்.
அங்கு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளையொட்டி நாணயம் ஒன்றையும் தாய்லாந்து மொழியில் திருக்குறள் மொழிப்பெயர்ப்பையும் வெளியிடுகிறார்.
பின்னர் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுகிறார். தாய்லாந்து பிரதமர் பிரயுத் ஷானோசாவை சந்தித்து பேசுகிறார். மாநாடுகளுக்கு இடை இடையே ஆசிய நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனா ஆட்சி அமைக்கிறதா?.. பாஜக அல்லாத ஆட்சி அமைக்க வியூகம்!
Comments
English summary
PM Narendra Modi to visit Thailand today. He also participate in Asian countries conference.
Story first published: Saturday, November 2, 2019, 9:51 [IST]