முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலம் தேறி வருகிறார்- விரைவில் நலமடைய தலைவர்கள் பிரார்த்தனை
டெல்லி: டெல்லி மருத்துவமனையில் நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன்சிங் விரைவில் முழுமையாக குணமடைய தலைவர்கள் பலரும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
Recommended Video
முன்னாள் பிரதமரும் முதுபெரும் காங்கிரஸ் தலைவருமான மன்மோகன்சிங்குக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு 8.45 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தற்போது மன்மோகன்சிங் உடல்நலம் தேறி வருவதாக அவரது அலுவலகம் தெரிவித்திருக்கிறது. மன்மோகன்சிங் உடல்நிலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மன்மோகன்சிங் உடல்நலம் பாதிக்கப்பட்டது கவலை தருகிறது. அவர் விரைவில் குணமடைவார். அவர் முழுமையாக குணமடைய ஒட்டுமொத்த இந்தியாவும் பிரார்த்திக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவகுமார் தமது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் குணமடைந்துவிடுவார். பல கோடி இந்தியர்களுடன் இணைந்து மன்மோகன்சிங் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டிருக்கிறார்.
இ பாஸ் வைத்திருந்தாலும் தமிழக வாகனங்கள் கர்நாடகா எல்லையில் தடுத்து நிறுத்தம்.. பொதுமக்கள் தவிப்பு
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலே மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் உளிட்டோரும் மன்மோகன்சிங் விரைவில் குணமடைய
பிரார்த்திப்பதாக கூறியுள்ளனர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் பதிவு
மன்மோகன்சிங் உடல்நிலை குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மன்மோகன்சிங் போன்றோரின் சேவை இந்த நாட்டுக்கு அவசியமானது. அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து நலமுடன் திரும்புவார். அவர் உடல்நலம் குணமடைய விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.