ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிவு.. அரசின் திட்டமிடல் தோல்விக்கு இதோ உதாரணம்- ப.சிதம்பரம்
டெல்லி: புலம் பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் மத்திய அரசு உரிய திட்டமிடலுடன் செயல்படவில்லை என்று, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில் என்ன கூறியுள்ளார், என்பதை நீங்களே பாருங்கள்:
- ஏப்ரல் 29 - புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எந்த பதிலும் இல்லை.
- ஏப்ரல் 30 - பேருந்துகள் மூலம், தொழிலாளர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்று உத்தரவு வருகிறது
- மே 1 - தொழிலாளர்களை அழைத்துச் செல்ல இடைநிற்காத ரயில்கள் அனுமதிக்கப்படும் என்று அனுமதி வருகிறது
அறிவு இல்லாமல் இருப்பதைவிட, விட தாமதமான அறிவு சிறந்ததுதான். ஆனால், மோசமான யோசனைகள் மற்றும் திட்டமிடலின் தோல்விக்கு, இந்த நிகழ்வு மற்றொரு உதாரணம்.
Comments
English summary
April 29 - no response to demand to allow migrant workers to go back home. April 30 - buses will be allowed to transport them. May 1 - non-stop trains will be allowed. Belated wisdom is better than no wisdom. It is another example of poor thinking and haphazard planning, says P.Chidambaram.
Story first published: Saturday, May 2, 2020, 12:06 [IST]