நான் தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசினேனா? பிரகாஷ் ராஜ் பரபரப்பு விளக்கம்!
தமிழக மாணவர்களை இழிவுபடுத்தும் வகையில் நான் பேசவே இல்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: தமிழக மாணவர்களை இழிவுபடுத்தும் வகையில் நான் பேசவே இல்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழர்கள் குறித்து பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் மாணவர்களின் உரிமையை தமிழக மாணவர்கள் பறிக்கிறார்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசி இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் மத்திய பெங்களூர் தொகுதியில் பிரகாஷ் ராஜ் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்து பிரகாஷ் ராஜ் நேற்று பிரச்சாரம் செய்தார்.
டெல்லி மாணவர்களின் உரிமையை தமிழர்கள் பறிக்கிறார்கள்.. நான் கன்னடன்.. பிரகாஷ் ராஜ் சர்ச்சை!
என்ன சொன்னார்
டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சிக்காக பிரச்சாரம் செய்த பிரகாஷ் ராஜ், டெல்லியின் கல்வி தரத்தை உயர்த்தி இருக்கிறார்கள். தமிழக மாணவர்கள் டெல்லி பல்கலையில் சேர்வதால் டெல்லி மாணவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. இது உண்மை. கெஜ்ரிவால் இப்படி சொல்வதில் தவறு எதுவும் கிடையாது.
கன்னடன்
டெல்லி மாணவர்களின் உரிமை தமிழக மாணவர்களால் தட்டிப்பறிக்கப்படுகிறது. நான் தமிழனாக இருந்து கொண்டு இப்படி பேசலாமா என்கிறார்கள். நான் தமிழன் அல்ல. நான் கன்னடன். தமிழ் படங்களில் நடித்து இருக்கிறேன், என்று கூறியதாக செய்திகள் வந்தது. இவரின் இந்த கருத்துக்கு டெல்லி தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடும் எதிர்ப்பு
அதேபோல் இதற்கு தமிழர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரகாஷ் ராஜ் தமிழ் படங்களில் நடித்துதான் நிறைய பணம் சம்பாதித்தார். ஆனால் அவர் இப்படி பேசுவது தவறு என்று மக்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். தமிழக முதல்வரும் இவரது பேச்சை விமர்சித்து இருந்தார்.
|
என்ன விளக்கம்
இந்த நிலையில் இதுகுறித்து தற்போது பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் அப்படிப்பட்ட கருத்தை தெரிவிக்கவே இல்லை. இதை வேண்டும் என்றே யாரோ தவறாக விளக்கி இருக்கிறார்கள். இப்படி தவறான விஷயத்தை செய்தவரை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது, என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார்.