முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. ராணுவ மருத்துவமனை
டெல்லி: முன்னாள் குடியரசு தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனாவும் உறுதியானதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர் திங்கள்கிழமை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூளையில் இருந்த ரத்தக் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. எனினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் இருக்கிறார். இந்த நிலையில் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகியுள்ளது.
தற்போது அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவ மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமைச்சர் தங்கமணி மீது அதிருப்தி...? திமுகவில் இணைந்த அதிமுகவினர்... பரபரக்கும் நாமக்கல்
டெல்லியில் உள்ள ஆர் ஆர் ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் கட்டியை நீக்க உயிர் காக்கும் அறுவை சிகிச்சை அவசரமாக மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருக்கு கொரோனாவும் உறுதியாகியுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.