குடியுரிமை மசோதாவை ஜேடியூ எப்படி ஆதரிக்கலாம்? கொந்தளிக்கும் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர்
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) ஆதரித்ததற்கு அக்கட்சியின் தேசிய துணைத் தலைவரும் தேர்தல் வியூக வல்லுநருமான பிரசாந்த் கிஷோர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் லோக்சபாவில் நிறைவேறியது. இம்மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்தது.
இம்மசோதா நிறைவேறிய உடனேயே தமது ட்விட்டர் பக்கத்தில், ஐக்கிய ஜனதா தளமும் ஆதரவு தெரிவித்தது அதிருப்தி அளிக்கிறது என பதிவிட்டார் அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர். ஜேடியூவின் கட்சி சட்ட விதிகளில் முதல் பக்கத்திலேயே 3 முறை மதச்சார்பின்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
Disappointed to see JDU supporting #CAB that discriminates right of citizenship on the basis of religion.
— Prashant Kishor (@PrashantKishor) December 9, 2019
It's incongruous with the party's constitution that carries the word secular thrice on the very first page and the leadership that is supposedly guided by Gandhian ideals.
ஜேடியூ தலைமையும் காந்திய கொள்கை வழிகளில் நடக்கிறது., அப்படியான நிலையில் இம்மசோதாவை ஆதரிப்பதை ஏற்கமுடியவில்லை என கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.