ஆம் ஆத்மியில் இணைகிறார் பிரசாந்த் கிஷோர்? 2024 லோக்சபா தேர்தலில் மோடிக்கு எதிராக கெஜ்ரிவால்?
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்திருக்கும் நிலையில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கான தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். அண்மையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டார்.
இருப்பினும் ஆம் ஆத்மி, திமுகவுக்கான தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார் பிரசாந்த் கிஷோர். டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரசாந்த் கிஷோர் இன்று சந்தித்து பேசினார். மேலும் இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியது டெல்லி என்றும் பிரசாந்த் கிஷோர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏதோ கரண்ட் ஷாக்குன்னு சொன்னீங்களே.. எப்படி இருக்கு அமித் ஷா ஜி? போஸ்டர் ஒட்டி கலாய்க்கும் ஆம் ஆத்மி
இதனிடையே ஆம் ஆத்மி கட்சியில் பிரசாந்த் கிஷோர் விரைவில் இணைவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் 2024 லோசபா தேர்தலில் பிரதமர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை முன்னிறுத்தி வியூகங்களையும் பிரசாந்த் கிஷோர் மேற்கொள்வார் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.