டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் நீதிபதி எஸ்ஏ போப்டே.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்ஏ போப்டே பொறுப்பேற்க உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் நீதிபதி எஸ்.ஏ போப்டே-வீடியோ

    டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்ஏ போப்டே பொறுப்பேற்க உள்ளார். நவம்பர் 18ம் தேதி இவர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

    உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தற்போது நீதிபதி ரஞ்சன் கோகாய் இருக்கிறார். இவர் கடந்த வருடம் 13 மாதங்களுக்கு முன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நவ. 17ம் தேதியோடு தலைமை நீதிபதி கோகாய் பதவிக்காலம் முடிகிறது.

    President Ram Nath Kovind has signed a warrant appointing Justice S A Bobde as The CJI

    தன்னுடைய பதவிக்காலத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முக்கியமான தீர்ப்புகள் பலவற்றை விசாரித்தார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை என்று இவர்தான் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் குறித்து நீதிமன்ற விசாரணை தேவையா என்பது குறித்த மேல்முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. மிக முக்கியமாக அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கொண்ட ஐந்து பேர் அமர்வுதான் தீர்ப்பு வழங்க உள்ளது.

    இவரின் பதவிக்காலம் நவம்பர் 17ம் தேதி முடிய உள்ளதால், அதற்கு முன் இந்த இரண்டு வழக்குகளில் தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்ஏ போப்டே பொறுப்பேற்க உள்ளார். நவம்பர் 18ம் தேதி இவர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதி எஸ்ஏ போப்டேவை பரிந்துரை செய்துள்ளார். வழக்கப்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான், அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்ய வேண்டும். வயது அடிப்படையில் இந்த பரிந்துரை செய்யப்பட வேண்டும்.

    அதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதி எஸ்ஏ போப்டேவை பரிந்துரை செய்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீதிபதி எஸ்ஏ போப்டே நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். 1978ல் இருந்து நீதிபதி எஸ்ஏ போப்டே சட்டத்துறையில் இருக்கிறார். இவர் 2000ல் மும்பை ஹைகோர்ட் நீதிபதியாக தன்னுடைய பணியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது.!வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது.!

    English summary
    President Ram Nath Kovind has signed a warrant appointing Justice S A Bobde as The next CJI.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X