டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சமூகத்தில் அன்பு, ஆரோக்கியம் மலரட்டும்... ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து!

Google Oneindia Tamil News

டெல்லி: பொங்கல் திருநாளையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விவசாயிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:-

President, Vice President Pongal Greetings

லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், போகாலி பிஹு, உத்தராயண் மற்றும் பாயுஷ் பர்வா பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த திருவிழாக்கள் நம் சமூகத்தில் அன்பு, பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தி நாட்டில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கட்டும் என்று கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் லோஹ்ரி, போகி வாழ்த்துக்கள். இந்த திருவிழாக்கள் அவற்றின் வண்ணமயமான தன்மைக்கு பெயர் பெற்றவை மற்றும் நல்ல அறுவடை மற்றும் இயற்கையின் அருளைக் குறிக்கின்றன. அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவரட்டும் என்று தெரிவித்து உள்ளார்.

போகி தொடங்கி காணும் பொங்கல் வரை நாலு நாளைக்கு அடாத மழை விடாது பெய்யும் போகி தொடங்கி காணும் பொங்கல் வரை நாலு நாளைக்கு அடாத மழை விடாது பெய்யும்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், 'அனைவருக்கும் இனிய லோஹ்ரி வாழ்த்துக்கள்! வீடுகளிலிருந்து வெகு தொலைவில் அமர்ந்து அவர்களின் உரிமைகளுக்காக துணிச்சலுடன் போராடி வாரும் நமது விவசாயி சகோதர சகோதரிகளுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் என்றார்.

English summary
President Ramnath Govind and Vice President Venkaiah Naidu have congratulated the people on the occasion of Pongal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X