கொரோனா எதிர்ப்பு போரில் வெல்வோம்- ஆரோக்கிய பூமியை உருவாக்குவோம்- மோடி ரமலான் வாழ்த்து
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் வென்று ஆரோக்கியமான பூமியை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் இஸ்லாமியர்கள் இன்று சனிக்கிழமை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கின்றனர். தற்போது லாக்டவுன் அமலில் உள்ளதால் வீடுகளில் இருந்தபடியே அனைத்து வழிபாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரமலான் பண்டிகையையொட்டிபிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள். அனைவரும் பாதுகாப்புடனும் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன். இப்புனிதமான ரமலான் மாதம் கருணை, மனிதநேயம் உள்ளிட்டவற்றை நமக்கு வழங்கட்டும்.
தற்போதைய கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெல்வோம். ஒரு ஆரோக்கியமான பூமியை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.