நதி நீர் இணைப்பு.. ரஜினியின் பாராட்டை பாஜக ஆதரவாக எடுத்துக் கொள்ளலாமா?.. பிரதமர் பதில்
Recommended Video
டெல்லி: நதி நீர் இணைப்புக்கு தனி ஆணையம் என்ற அறிவிப்பு குறித்து ரஜினிகாந்த் பாராட்டை பாஜகவுக்கு ஆதரவாக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார்.
பாஜக தேர்தல் அறிக்கையில் நதி நீர் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ரஜினிகாந்த் வரவேற்பளித்துள்ளார்.
கொய்யால.. ரெண்டு பேரும் சேர்ந்து பித்தலாட்டமா பண்றீங்க.. வச்சு செஞ்ச நெட்டிசன்கள்
விவசாயிகள்
இதுகுறித்து அவர் கூறுகையில் நதி நீர் இணைப்பு கொண்டு வரப்பட்டால் வறுமை ஒழியும். வேலைவாய்ப்பு பெருகும். விவசாயிகளின் பிரச்சினை தீரும் என ரஜினி கூறியுள்ளார்.
பாராட்டு
தங்களது திட்டத்தை வரவேற்ற ரஜினிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் சாமானிய மக்களின் தண்ணீர் பிரச்னையை ரஜினிகாந்த் பேசியிருப்பது நல்ல விஷயம். பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
சந்திப்பு
ரஜினியின் பாராட்டை பாஜகவுக்கு ஆதரவாக எடுத்துக் கொள்ளலாமா என மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறுகையில் 2013 மற்றும் 2014-ல் அவரை சந்தித்து பேசினேன். அதன் பிறகு சந்திக்கவில்லை.
ஏராளமான கேள்விகள்
ரஜினிகாந்த் என்னை நேரில் சந்திக்கும் போது, அவருக்கு அரசியல் ஆலோசனைகள் பற்றி பேசுவேன் என தெரிவித்துள்ளார். இது போல் பிரதமர் மோடி ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.