பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப் உளவு பார்க்கப்பட்டது- காங். புகார்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப் உளவு பார்க்கப்பட்டது என காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் பிரபலங்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டன என்பது குற்றச்சாட்டு. மத்திய அரசுதான் உளவு பார்த்தன என்கின்றன எதிர்க்கட்சிகள்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, தமது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டன எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பும் வேவு பார்க்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.
ரஜினியுடன் அரசியலில் நாங்கள் மாறுபடுகிறோம்.. ஆனால்.. கே எஸ் அழகிரி
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, பெகாசஸ் ஸ்பைவேர் பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பை தாக்கியிருக்கிறது. இது தொடர்பாக எச்சரிக்கை மெசேஜ் பிரியங்கா காந்திக்கு வந்திருக்கிறது.
இதற்கு காரணமே மத்திய அரசுதான் என கூறினார்.