குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு: டெல்லியில் ஜம்மா மசூதி அருகே மீண்டும் பிரமாண்ட போராட்டம்
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஜம்மா மசூதிக்கு வெளியே இன்று மீண்டும் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இப்போராட்டங்களால் டெல்லியில் இன்றும் பல இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
பல பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லி ஜம்மா மசூதிக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பல இடங்களில் போராட்டம்
இதேபோல் டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம், சீலம்பூர், ஜோர் பாக் ஆகிய இடங்களிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒய்யாரமாய் ஊஞ்சல் ஆடிய நபர்.. மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் நெட்டிசன்கள்.. ஏன் தெரியுமா?