மனுஷன் கெட்டான் போங்க!.. இந்த செல்லக்குட்டி பப்பிக்கு எம்புட்டு அறிவு?.. வைரல் வீடியோ!
டெல்லி: ஒரு நாய்க் குட்டி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வருவதற்கு முன்பு தனது கால்களை மிதியடியில் துடைத்துக் கொண்டு வரும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
சுத்தம் சோறு போடும் என சொல்வது உண்டு. கூழானாலும் குளித்து குடி, கந்தலானாலும் கசக்கிக் கட்டு என்ற சொல்வடை உண்டு. இது சுத்தத்தை பற்றியதாகும்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தால் அது கடவுள் செய்யும் சேவைக்கு சமானம் என்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியவுடன் கை, கால்கள், முகம் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பழக்கம் இன்றும் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு.
70 நாட்களில் 2ஜி வழக்கு விசாரணை- தமிழகத்தில் 2 லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல்.. ஹெச். ராஜா ஆரூடம்
நோய் நொடி
இதன் மூலம் தீய சக்திகள் நம் வீட்டிற்கு நுழைவதை தடுக்கவும், நோய் நொடி இல்லாத வாழ்வை வாழவும் இது உதவும். இதை குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சொல்லிக் கொடுத்து அவர்களை பழக்கி விடுகிறோம். அது போல் ஒரு குட்டி பப்பிக்கு இது போன்ற சுத்தப்பத்தமான விஷயங்களை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி
இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது. சுமார் 14 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு போஸ்ட் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் அந்த குட்டி பப்பியை பாராட்டி வருகிறார்கள். தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த அந்த குட்டி நாய் வீட்டுக்குள் வருகிறது.
சின்ன பப்பி
அப்போது வீட்டுக்குள்ளே வரும் போது அங்கிருந்த மிதியடியில் தனது பாதங்களை தேய்க்கிறது. அதாவது சார் வெளியே போய்ட்டு வந்தால் கால்களை துடைத்துக் கொண்டுதான் வருவாராம்! சின்ன பப்பிக்கு எத்தனை அறிவு பாருங்க. இந்த வீடியோவை பார்த்த பலர் இதை புத்திசாலி நாய்க் குட்டி என பாராட்டுகிறார்கள்.
|
விலங்கு
இன்னும் சிலரோ நல்ல பையன் என்கிறார்கள். விலங்குகளுக்கு கொரோனாவின் தாக்கம் தெரிகிறது. ஆனால் இந்த மனிதர்களுக்கு இன்னும் புரியாமல் முகக் கவசம் அணிவதைகூட விட்டுவிடுகிறார்கள் என்றார் ஒரு நெட்டிசன். ஒழுக்கமான வளர்ப்பு என இன்னொரு வலைஞர் தெரிவித்துள்ளார்.