டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேல் ஒப்பந்தத்தில் என்னதான் நடந்தது? ஏன் இந்த வழக்கு? அதிர்ச்சி உண்மைகளும் அதிரடி ஆதாரங்களும்!

ரபேல் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், ரபேல் ஒப்பந்தம் என்றால் என்ன? இது ஏன் சர்ச்சையானது? இதில் என்ன பிரச்சனை என்று பார்க்கலாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், ரபேல் ஒப்பந்தம் என்றால் என்ன? இது ஏன் சர்ச்சையானது? இதில் என்ன பிரச்சனை என்று பார்க்கலாம்!

எல்லோரும் எதிர்பார்த்த ரபேல் வழக்கில் நாளை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆனால் நாளை வழங்கப்படும் தீர்ப்பு என்பது ரபேல் வழக்கில் ஊழல் நடந்ததா என்று கூறாது.. மாறாக ரபேல் ஒப்பந்தம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் அல்லது சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டுமா என்று கூறப்படும்.

அதாவது ரபேல் ஒப்பந்தத்தை விசாரிக்க வேண்டுமா? அல்லது கூடாதா? என்று நாளை தீர்ப்பு வழங்கப்படும். இதில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வாங்கிவிட்டது. அதற்கு எதிராக மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.

யாரெல்லாம் மனுதாக்கல்

யாரெல்லாம் மனுதாக்கல்

ரபேல் வழக்கில் முதலில் 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.

ரபேல் என்றால் என்ன

ரபேல் என்றால் என்ன

ரபேல் வழக்கை பற்றி தெரிந்துகொள்ளும் முன் ரபேல் விமானம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் இந்தியாவின் தேர்வு ரபேல் விமானம் கிடையாது. ஆம் இந்தியா ரபேல் மீது தன் கவனத்தை செலுத்தவே இல்லை. ரபேல் விமானம் சீனுக்கு வந்ததே கடைசியில்தான். ரபேல் போலவே நிறைய MMRCA ரக விமானங்கள் உலகின் பிற நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.

மார்டின் எஃப் - 16, போயிங் எஃப்/ஏ 18, யூரோபைட்டர் டைபூன், ரஷ்யா மிக் 35, ஸ்வீடன் சாப் கிரிப்பேன் மற்றும் ரபேல் ஆகிய விமானங்கள் இதற்காக சோதனை செய்யப்பட்டது. கடைசியில் விலை மற்றும் தேவையை வைத்து ரபேல் தேர்வு செய்யப்பட்டது.

முடிவு எடுக்கப்பட்டது

முடிவு எடுக்கப்பட்டது

முதலில் இந்த ரபேல் ஒப்பந்தம் என்பது இந்திய விமான படையின் பலத்தை அதிகரிக்கவே தேர்வு செய்யப்பட இருந்தது. இதன் மூலம் புதிய ரபேல் ரக விமானங்களை வாங்கி ராணுவ பலத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதை வாங்க நினைத்தது பாஜக அல்ல. காங்கிரஸ் அரசுதான் காங்கிரஸ் அரசின் ஆட்சியில் 2001ல் இதற்காக திட்டம் போடப்பட்டு, 2007ல் பல பேச்சுவார்த்தைகள் நடத்தி, 2012 தொடக்கத்தில் ரபேல் விமானங்களை வாங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

விமானம் எப்படி

விமானம் எப்படி

ரபேல் இரண்டு இன்ஜின் கொண்ட மல்டி ரோல் வகை காம்பேட் ரக MMRCA வகை விமானம் ஆகும். ரபேல் என்பது ஒரு வகையான, புதிய தலைமுறை போர் விமானம் ஆகும். இதன் மூலம் போர் சமயங்களில் ஒரு நாடு எளிதாக தாக்குதல் நடத்த முடியும். சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளை எளிதாக தூரத்தில் இருந்து செய்ய முடியும். அமெரிக்காவின் எப் 14ஐ விட இது சக்தி வாய்ந்தது. அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்டது இந்த விமானங்கள். மிக மோசமான சூழ்நிலையில் கூட இது தாக்கு பிடிக்கும்.

பிரான்ஸ் எப்படி

பிரான்ஸ் எப்படி

ரபேலை வாங்குவதற்காக பல நாடுகள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முதலில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் மற்ற நாடுகளை விட குறைந்த விலையில் விமானம் தருவதாக பிரான்ஸ் கூறிய காரணத்தால் இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்டது.

டஸால்ட் வந்தது எப்படி

டஸால்ட் வந்தது எப்படி

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே இந்த விமானம் வாங்க Dassault என்ற பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. 2014ல் இரண்டு நாட்டிலும் மாற்றி மாற்றி தேர்தல் நடந்த காரணத்தால் ஒப்பந்தம் செய்யப்படாமல் தள்ளி போய் கொண்டே இருந்தது.

வேகம் எடுத்தது

வேகம் எடுத்தது

அதன்பின் 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதன்பின்தான் பாஜக ஆட்சியில்தான் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது. ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது இறுதி பேச்சுவார்த்தை நடந்து, முழுமையான ஒப்பந்தம் நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது செய்யப்பட்டது. பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று இதற்காக அதிகாரிகளை சந்தித்து ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார்.

என்ன ஊழல்

என்ன ஊழல்

இனி என்ன ஊழல் புகார் என்று பார்க்கலாம், இந்த வழக்கில் காங்கிரஸ் ஒப்பந்தத்தின் படி, மொத்தம் 126 விமானங்களை இந்திய அரசு வாங்க இருந்தது. அதில் 18 விமானங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படும். மற்ற 108 விமானங்கள் உதிரி பாகங்களாக அனுப்பப்பட்டு இந்தியாவில் உருவாக்கப்படும். இதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். Dassault என்ற நிறுவனம்தான் இந்த விமானங்களை இந்தியாவிற்கும் அளிக்கும்.

பாஜக எங்கு சிக்கல்

பாஜக எங்கு சிக்கல்

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின், 126 விமானங்களை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. விலை அதிகமாக இருக்கிறது என்று கூறி, வெறும் 36 விமானங்களை மட்டும் வாங்குவோம் என்றும், பிரான்ஸ் விமான தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் என்ன தவறு என்று கேட்கலாம்.. தவறு இருக்கிறதாம்!

தவறு என்ன

தவறு என்ன

அதாவது காங்கிரஸ் ஒரு விமானத்தை 350 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்தது. காங்கிரஸ் ஆட்சியின் போது 126 விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. காங்கிரஸ் ஒப்பந்தத்தின்படி 126 விமானங்களை ரூ 41,212 கோடிக்கு வாங்கி இருக்கலாம். ஆனால் பாஜக பிரான்ஸ் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரு விமானத்திற்கு ரூ.1321 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதுதான் புகார்

இதுதான் புகார்

இதுதான் மனுதாரர்கள் 5 பேரும் வைக்கும் புகார். இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. மொத்தமாக 36 விமானம் வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மொத்தம் 50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதவாது பாஜக வேண்டுமென்று அதிக விலைக்கு விமானங்களை வாங்கியுள்ளது. ஆனால் மத்திய அரசு இதற்கான விலையை வெளியிடவில்லை.

கூடுதல் செலவு

கூடுதல் செலவு

126 விமானத்திற்கு பதில் 36 விமானம் மட்டுமே வாங்கப்பட்டு இருப்பதால், சரியான இழப்பு 50 ஆயிரம் கோடி ரூபாய் வரும் என்று கூறப்படுகிறது.பாஜக மூலம் இப்போது 36 விமானங்கள் மட்டுமே வாங்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கூறிய விலைக்கு வாங்கி இருந்தால் மொத்தமாக 126 விமானங்களை ரூ 41,212 கோடிக்கு வாங்கி இருக்கலாம். ஆனால் இப்போது 36 விமானங்களை வாங்கவே 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளுக்கு பிரான்ஸ் விமானங்களை கொடுத்த விலையை விட அதிக விலைக்கு இந்தியா வாங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு எகிப்த், கத்தாருக்கு விற்கப்பட்ட போது இதே விமானம் ரூ.1,319.80 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பாஜக பிரான்ஸ் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனம்

ரிலையன்ஸ் நிறுவனம்

சரி இதில் ரிலையன்ஸ் எப்படி வந்தது என்று கேட்கலாம். இந்த வழக்கில் பிரதமர் மோடி வந்த பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி, பங்குதாரர்கள் கைமாறி இருக்கிறார்கள். மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம் இரண்டும் இதில் இருந்து நீக்கப்பட்டு அங்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

என்ன குற்றச்சாட்டு

என்ன குற்றச்சாட்டு

இந்த வழக்கில் மனுதாரர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்.

1. ஏன் குறைவான ரபேல் விமானங்கள் வாங்கப்பட்டது?

2. ஏன் குறைவான விமானங்களை காங்கிரஸ் வைத்த விலையை விட அதிக விலைக்கு வாங்கினார்கள்?

3. ஏன் எச்ஏஏ நிறுவனம் தூக்கப்பட்டு ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது?

4. ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளே வந்தது எப்படி? ஆகிய கேள்விகள் இதில் முன்வைக்கப்பட்டது.

ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்திற்கு வெறும் 10 நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளித்ததே நிர்மலா சீதாராமன்தான், அதற்கான ஆவணங்களில் நிர்மலா சீதாராமனின் கையெழுத்து இருக்கிறது என்றும்
மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.

என்ன ஆதாரங்கள்

என்ன ஆதாரங்கள்

இதில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள்,

1. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு லைசன்ஸ் வழங்கியது தொடங்கி இதற்கு முழு முதற்காரணமாக இருந்தது பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான்.

2. ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு அளிக்கும் டஸால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் டிரப்பியார் 2015 மார்ச்சில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

3. அவர் காங்கிரஸ் ஆட்சியில் 126 விமானம் ஒப்பந்தம் செய்யப்பட்டதையும், பாஜக ஆட்சியில் அது வெறும் 26 விமானங்களாக குறைந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

4. ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய சந்தோசமாக இருக்கிறது என்று பாஜகவிற்கு எதிராக கூறியுள்ளார்.

ஆனால் ஏற்கவில்லை

ஆனால் ஏற்கவில்லை

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் ஒரு மாதம் விசாரித்தது. மத்திய அரசு தாக்கல் செய்த ஆதாரங்கள், வாதங்கள் இவைதான்,

1. மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பத்திரங்களை அரசு உச்ச நீதிமன்றத்தில் 14 பக்க அறிக்கையாக தாக்கல் செய்தது.

2. விமானம் குறித்த உண்மையான விலை விவரங்களை அளிக்க முடியாது. அப்படி விலை விவரங்களை அளித்தால் அது இந்தியா பாதுகாப்பிற்கு பிரச்சனை ஆகும். இது ராணுவ பாதுகாப்பு தொடர்பானது என்று மத்திய அரசு கூறியது.

3. பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி விலை விவரங்களை வெளியே அளிக்க கூடாது. பிரான்ஸ் அனுமதியுடன் மட்டுமே ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விலை விபரங்களை அளிக்க முடியும் என்று கூறியது.

4. மேலும் மத்திய அரசு, டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்தத்தாரரை அரசு தேர்வு செய்யவில்லை. அதை தேர்வு செய்தது டசால்ட் நிறுவனம்தான் என்று கூறியது. ஒப்பந்த முறைப்படி அதற்கான உரிமை டசால்ட் நிறுவனத்திற்குத்தான் இருக்கிறது. அதனால் அவர்கள்தான் அதை தேர்வு செய்தது என்று கூறியது.

5. டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரர் யார் என்றே தெரியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது குறித்து தங்களுக்கு தெரியாது என்று கூறியது.

6. மிக முக்கியமாக தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில், காங்கிரஸ் ஒப்பந்தத்தை விட பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தம் விலை குறைவானது என்று கூறப்பட்டது.

தீர்ப்பு வழங்கியது

தீர்ப்பு வழங்கியது

இதையடுத்து ரபேல் வழக்கில் எந்த விதமான முறைகேடும் நடந்தது போல தெரியவில்லை, அதனால் இதை விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் கூறியது. ஆம், இவ்வளவு வாதங்கள் முடிந்த பின், ரபேலில் ஊழல் நடந்ததாக தெரியவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவ்வளவுதான் ரபேல் வழக்கு முடிந்துவிட்டது என்று எல்லோரும் நினைத்தார்கள்.

என்ன திருப்பம்

என்ன திருப்பம்

ஆனால் அதன்பின் நடந்தது எல்லாம் போபர்ஸ் கால வரலாறு. யாரும் நினைக்காத ஒரு நாளில்தான் தி இந்து நாளிதழில் மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கசிந்த ஆதாரங்களை இவர் வெளியிட்டு கட்டுரை எழுதி இருந்தார். மிக முக்கியமாக பிரதமர் மோடியின் அலுவலகத்தை இவர் நேரடியாக தனது ஆதாரங்கள் மூலம் குற்றஞ்சாட்டி இருந்தார்.

மறுசீராய்வு மனு

மறுசீராய்வு மனு

இதனால் மீண்டும் ரபேல் பூதம் கிளம்பியது. சரியாக ரபேல் வழக்கில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை தொடங்கியது. மறுசீராய்வில் நான்கு மனுக்கள்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எல்லோரும் எதிர்பார்த்தது போலவே, மத்திய அரசுக்கு எதிராக இந்த கசிந்த ஆதாரங்கள் உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதை கடுமையாக எதிர்த்தது. மாறாக இந்த ஆதாரங்களை தற்போது உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

வழக்கு மாறியது

வழக்கு மாறியது

தி இந்து வெளியிட்ட ஆதாரங்கள் இந்த வழக்கில் மிக முக்கியமானது. இதையடுத்து இந்த வழக்கு புதிய திசையை நோக்கி பயணிக்க தொடங்கியது. ரபேல் வழக்கில் இதுவரை தி இந்து மூலம் பத்திரிக்கையாளர் என்.ராம் வெளியிட்ட ஆதாரங்கள் இவைதான்.

  • ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது.
    • ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய ஒப்பந்த குழுவின் பேச்சுவார்த்தை மட்டுப்படுத்தப்பட்டது.
      • பிரதமர் அலுவலகத்தின் பேச்சுவார்த்தைக்கு இந்திய குழுவே எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பான கடித பரிவர்த்தனை.
        • ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக ஒப்பந்த விதிகளை தளர்த்தியது.
          • முறைகேடாக ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.
            • ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்த விதமான வங்கி உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதனால் ரபேல் ஒப்பந்தத்தில் திட்டமிடப்பத்தை விட இந்தியாவிற்கு அதிக செலவு ஏற்பட்டு உள்ளது என்பது குறித்த ஆதாரம்.
              • சிஏஜி அறிக்கையில் தவறான தகவல்கள் உள்ளது குறித்த ஆதாரம். கணக்குகள் தவறு.
                • மிக முக்கியமாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உண்மைகளை மறைத்தது என்பது தொடர்பான ஆதாரம்.
நாளை தீர்ப்பு

நாளை தீர்ப்பு

இந்த புதிய ஆதாரங்களுடன் இந்த வழக்கு விசாரணை முடிந்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது. நாளை மதியம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

English summary
Rafale Deal: Alpha and Omega about The great Rafale Deal and its controversies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X