டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது மோடிக்கு கிடைத்த வெற்றி.. ரபேல் தீர்ப்பிற்கு வரும் தலைவர்களின் கருத்துக்களை பாருங்க!

ரபேல் ஒப்பந்த தீர்ப்பு குறித்து பல்வேறு கட்சித்தலைவர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் தீர்ப்பு : அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் என்ன?- வீடியோ

    டெல்லி: ரபேல் ஒப்பந்த தீர்ப்பு குறித்து பல்வேறு கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.

    அதில் , ரபேல் ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு. அதில் தலையிட முடியாது. இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவைில்லை, இதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரியவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    காங்கிரஸ் வைத்திருந்த பிரம்மாஸ்திரம் வீழ்ந்தது.. ரபேல் வழக்கில் பாஜகவிற்கு பெரும் நிம்மதி! காங்கிரஸ் வைத்திருந்த பிரம்மாஸ்திரம் வீழ்ந்தது.. ரபேல் வழக்கில் பாஜகவிற்கு பெரும் நிம்மதி!

    டி ராஜா விசாரணை

    டி ராஜா விசாரணை

    இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா பேட்டியளித்துள்ளார். அதில், இந்தியாவில் நாடாளுமன்றத்திற்குத்தான் உச்ச அதிகாரம் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரபேல் பிரச்சனையை கையில் எடுக்க வேண்டும். நாடாளுமன்றக்கூட்டுக்குழு இதை விசாரிக்க வேண்டும் என்றுள்ளார்.

    ராஜ்நாத் சிங் என்ன சொல்கிறார்

    ராஜ்நாத் சிங் என்ன சொல்கிறார்

    இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ''இது ஒப்பந்தம் தொடக்கத்தில் இருந்தே தெளிவாக இருக்கிறது. நாங்கள் அதைத்தான் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். காங்கிரஸ் வைத்து குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபணம் ஆகியுள்ளது. இது மோடிக்கு கிடைத்த வெற்றி. காங்கிரஸ் அரசியல் லாபத்திற்காக குற்றச்சாட்டு வைக்கிறது என்றுள்ளார்.

    பிரஷாந்த் பூஷன் கருத்து

    பிரஷாந்த் பூஷன் கருத்து

    மத்திய அரசுக்கு எதிரான மனுதாரர்களுள் ஒருவரான பிரஷாந்த் பூஷன் இதுகுறித்து தெரிவித்த கருத்தில் ''இந்த தீர்ப்பு தவறானது. நாங்கள் விசாரணை மட்டுமே கேட்டோம். அதை கூட நீதிமன்றம் ஏன் கேட்கவில்லை, இது சரியான முடிவாக இருக்காது. இதை விசாரித்தே ஆக வேண்டும்'' என்றுள்ளார்.

    ரவிசங்கர் பிரசாத் கருத்து

    ரவிசங்கர் பிரசாத் கருத்து

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ''சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மொத்த ஒப்பந்தமும் மிகவும் சரியான முறையில் செய்யப்பட்டது. ரபேலுக்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரம் எல்லாம் பொய்யானது. ரபேலுக்கு எதிரான பிரச்சாரம் உடனே நிறுத்தப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

    English summary
    Rafale Deal: Political leaders view on the Supreme Court Verdict.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X