அமேதி மக்கள் என் குடும்பம்.. என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.. ராகுல் காந்தி உருக்கம்
டெல்லி: அமேதி மக்கள் என் குடும்பம். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என ராகுல் காந்தி உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டில் வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது.
அமேதியில் நாளை மறுதினம் அதாவது மே 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தந்தை ராஜீவ்காந்தியின் தொகுதியான அமேதியில் 4-ஆவது முறையாக ராகுல் போட்டியிடுகிறார்.
அமேதி என் குடும்பம்
இந்த நிலையில் அமேதி என் குடும்பம் என்ற தலைப்பில் அந்த தொகுதி மக்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் அமேதி தொகுதி மக்கள் அனைவரும் எனது குடும்பம்.
ஒன்றுப்படுத்தும் முயற்சி
வரும் தேர்தலில் பெருவாரியாக வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். அமேதி மக்கள் கொடுத்த அன்பின் காரணமாக நாட்டின் அனைத்து திசைகளையும் ஒன்றுபடுத்த முயல்கிறேன்.
தடுத்த பாஜக
உண்மை, நேர்மை, எளிமை ஆகியவற்றில் அமேதி வாக்காளர்களின் பலம் அடங்கியிருக்கிறது. அந்த மக்கள் அளித்த துணிச்சலால்தான் நான் உண்மையை பின்பற்றி வருகிறேன். காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பாஜகவால் தடுக்கப்பட்ட திட்டங்களை தொடங்குவேன்.
பாஜக ஆட்சி
விவசாயி, இளைஞர்கள், நலிவடைந்தோர், பெண்கள், சிறிய வர்த்தகர்களுக்கு காங்கிரஸ் கட்சி வேலை செய்கிறது. ஆனால் பாஜகவோ தொழிலதிபர்களுக்கு வேலை செய்கிறது என்று தனது கடிதத்தில் ராகுல் குறிப்பிட்டிருந்தார்.