லோக்சபாவுக்குள் புகுந்த ரபேல்.. காகித விமானத்துடன் ராகுல் ஆக்ரோஷ கோஷம்
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை கேலி செய்யும் வகையிலும் சிஏஜி அறிக்கையை ஏற்க மறுத்தும் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன்சிங், ப.சிதம்பரம் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ரபேல் விமான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாகவே தங்களுக்கு கிடைக்க போவது அனில் அம்பானிக்கு முன்கூட்டியே தெரியும் என ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை நேற்று முன் வைத்தார்.
இதன் மூலம் பிரதமர் மோடி ரகசிய காப்புக்கு எதிராக நடந்து கொண்டார் என்றும் இடைத்தரகர் போல் செயல்பட்டுள்ளார் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.