மோடியின் இந்தியாவில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அமானுஷ்ய சக்தி.. ராகுல் காந்திக்கு சந்தேகம்
Recommended Video
டெல்லி: மோடியின் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மர்மமான சக்தி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் என இரு மாதங்களில் நடந்து முடிவடைந்தன. நேற்று, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், காங்கிரஸ் கட்சியினர் வாக்குப்பதிவு முடிந்த பிறகு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மத்திய பிரதேசத்தில், வாக்குப்பதிவுக்கு பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வினோதமாக செயல்பட்டன. சிலர் வாக்குப்பதிவு இயந்திரங்களுடனான பள்ளி வேனை திருடி, அழித்தனர். குடிபோதையில் அவர்கள் ஹோட்டலில் சிக்கினர். மோடியின் இந்தியாவில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மர்மமான சக்தி உள்ளது. அலர்ட்டாக இருங்கள். இவ்வாறு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
Congress party workers, it’s time to be vigilant.
— Rahul Gandhi (@RahulGandhi) December 7, 2018
In MP, EVMs behaved strangely after polling:
Some stole a school bus and vanished for 2 days. Others slipped away & were found drinking in a hotel.
In Modi’s India, the EVMs have mysterious powers.
Stay alert! pic.twitter.com/dhNeraAfxa
வாக்குப்பதிவு இயந்திரங்களில், பாஜக மோசடி செய்வதாக காங்கிரஸ் தலைவர்கள் வெகு காலமாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.