ராஜிவ் காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினம்.. சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 28வது நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் இன்று அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு வந்திருந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
அவர் உயிரிழந்து 28 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், டெல்லியில் உள்ள வீர்பூமி பகுதியில் உள்ள நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும் ராஜிவ் காந்தி மனைவியுமான, சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவரும், மகனுமான, ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இன்று காலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Delhi: Congress President Rahul Gandhi, UPA Chairperson Sonia Gandhi and Congress General Secretary for UP (East) Priyanka Gandhi Vadra pay tribute to former Prime Minister #RajivGandhi, on his death anniversary at Veer Bhumi. Robert Vadra also present. pic.twitter.com/njKY1jT6rv
— ANI (@ANI) May 21, 2019
அமித்ஷா ஸ்பெஷல் டின்னர்.. எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட தமிழக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு