துபாய் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தொண்டர்களுக்கு ராகுல் நன்றி
துபாய் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளால் திக்குமுக்காடிய ராகுல் காந்தி.. தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி
டெல்லி: துபாய் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளால் திக்குமுக்காடிய ராகுல் காந்தி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி துபாய் சென்றார். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அவரை வரவேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர்.
அவர்கள் ராகுல் காந்தியை வரவேற்கும் விதமாக பதாகைகளை கையில் ஏந்தியபடி நின்றனர். இந்தியர்களை பார்த்து சிரித்து கையசைத்தார் ராகுல்.
இந்த நிலையில் அவரது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கூறுகையில் துபாயில் நடந்த நிகழ்ச்சிகளை எவ்வித சோர்வும் இன்றி வெற்றிகரமாக நடத்த காரணமாக இருந்த அனைத்து தொண்டர்களுக்கும் எனது நன்றி.
I want to thank all those who worked tirelessly behind the scenes to make all the programs in Dubai yesterday a huge success, particularly the spectacular rally at the sports stadium last night! A special call out to the Kerala Unit of the Congress party & all the volunteers 🙏 pic.twitter.com/uXSzVRJnML
— Rahul Gandhi (@RahulGandhi) January 12, 2019
விளையாட்டு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பேரணி அருமை. கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்களுக்கு சிறப்பு நன்றிகள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.