இந்தியாவின் உண்மையான நண்பரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி- ராகுல் காந்தி டுவீட்
டெல்லி: இந்தியாவின் உண்மையான நண்பரை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி துபாய் சென்றார். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அவரை வரவேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர்.
அவர் தனது டுவிட்டரில் கூறுகையில் ஐக்கிய அரபு நாடுகளின் கலாசாரம், இளைஞர் நலம், சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஷேக் நயன் பின் முபாரக் அல் நயனை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருடன் மதிய உணவை உட்கொண்டேன்.
It was a pleasure to meet Sheikh Nahyan Bin Mubarak Al Nahyan in Abu Dhabi today, at the lunch he hosted for our delegation. He is a true friend of India & I look forward to working with him to strengthen the relationship between our countries. pic.twitter.com/nDWfwtWdFL
— Rahul Gandhi (@RahulGandhi) January 12, 2019
இந்தியாவின் உண்மை நண்பரான அவருடன் பணியாற்ற விரும்புகிறேன். அச்சமயம் இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்த விரும்புகிறேன் என ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியுள்ளார்.