அஹ்ஹஹா.. 6 ஆண்டுகளில் அட்டகாசம்..தனிநபர் வருவாயில் இந்தியாவை முந்தும் வங்கதேசம்.. ராகுல் பொளேர் போடு
டெல்லி: பிரதமர் மோடியின் 6 ஆண்டு கால ஆட்சியில் தனிநபர் வருவாயில் இந்தியாவை வங்கதேசம் முந்தப் போகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
இந்திய பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி -10.3% ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் தனிநபர் வருவாயில் வங்கதேசம், இந்தியாவை நெருங்கி இருக்கிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. இதனை மேற்கோள்காட்டியிருந்த ராகுல் காந்தி, 6 ஆண்டுகாலத்தில் அற்புதமான சாதனை படைத்திருக்கிறது மத்திய அரசு என கிண்டலடித்து ட்விட்டரில் பதிவிட்டார்.
ராகுல் காந்தியின் இந்த கிண்டல் பதிவுக்கு மத்திய அரசும் பதிலடி கொடுத்துள்ளது. அதில், 2019-ம் ஆண்டு வங்கதேசத்தை விட இந்தியாவின் ஜிடிபி 11 மடங்கு உயர்ந்திருந்ததே என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு
மேலும் இதே சர்வதேச நிதியத்தின் அறிக்கையிலேயே 2021-ல் இந்தியாவின் ஜிடிபியான 8.8% ஆகவும் வங்கதேசத்தின் ஜிடிபியானது 4.4% மட்டுமே இருக்கும் எனவும் கணிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் ராகுல் காந்திக்கு பதில் தரப்பட்டுள்ளது.