காங். தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்து நீடிப்பார்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர்ந்து நீடிப்பார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாள சுர்ஜிவாலா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களுக்கான பொதுச்செயலர்கள் கூட்டத்தை கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலுக்காக அமைக்கப்பட்ட குழுவும் விரைவில் கலைக்கப்பட இருக்கிறது. அத்துடன் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகக்க் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
பட்டதே போதும்.. தனியாகவே தேர்தலை சந்திக்கலாம்.. அதிமுகவை நெருக்கும் மா.செ.க்கள்?
இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செய்தியாளர்களிடம் பேசிய சுர்ஜிவாலா திட்டவட்டமாக கூறினார். முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ரேபரேலி தொகுதிக்கு சென்றார்.
தமக்கு தொடர்ந்து வாக்களித்து எம்.பி.யாக வெற்றி பெற வைக்கும் அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார் சோனியா காந்தி.