ராஜஸ்தான், தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்கள்.. வாக்கு பதிவு நிறைவடைந்தது!
Recommended Video
டெல்லி: ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. காலை தொடங்கிய வாக்குப்பதிவு 5 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த ஆண்டு 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 3 மாநிலங்களுக்கு சென்ற வாரமே தேர்தல் நடந்து விட்டது. மீதமுள்ள ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவுகள் துவங்கின.
தெலுங்கானாவில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுடன் மாநில கட்சிகளும் போட்டி போடுகின்றன. வாக்குப் பதிவையொட்டி இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இருந்தது.
Telangana: People queue outside a polling station in Jubilee Hills, Hyderabad to cast their votes. Voting is being held in 119 constituencies of the state today. #TelanganaElections2018 pic.twitter.com/pkAAk6PZ88
— ANI (@ANI) December 7, 2018
இரண்டு மாநிலங்களிலும் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். முக்கியமான ராஜஸ்தானில் மக்கள் அதிக அளவில் ஆர்வமாக வாக்களித்தனர்.
ராஜஸ்தானில் மூன்று மணி வரை 59.43 சதவிகிதம் பேரும், தெலுங்கானாவில் 3 மணி வரை 56.17 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
Rajasthan: Mock polling being conducted at booth no. 106 in Jodhpur's Sardarpura constituency. Voting will begin at 8 am in the state. #RajasthanElections2018 pic.twitter.com/WSRE6AYa6s
— ANI (@ANI) December 7, 2018
தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 5 மாநிலங்களுக்கும் வரும் 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.