டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு மார்ச் 26-ல் தேர்தல்!

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ந் தேதி முடிவடைகிறது. இதில் தமிழகத்தில் திருச்சி சிவா (திமுக), சசிகலா புஷ்பா (தற்போது பாஜக), விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ் (அதிமுக), ரங்கராஜன் (சிபிஎம்) ஆகியோரது பதவி காலமும் முடிவடைகிறது.

Rajya Sabha election in TN to be held on March 26

இதையடுத்து 55 எம்.பி.க்கள் காலி இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் மார்ச் 6-ல் தொடங்குகிறது.

வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய மார்ச் 13-ந் தேதி கடைசிநாள். இதில் போட்டி இருந்தால் மார்ச் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாம விழுந்து விழுந்து கவனிச்சும்.. டொனால்ட் ட்ரம்ப்பின் பாகிஸ்தான் பாசத்தை பாருங்க.. அதிர்ச்சி!நாம விழுந்து விழுந்து கவனிச்சும்.. டொனால்ட் ட்ரம்ப்பின் பாகிஸ்தான் பாசத்தை பாருங்க.. அதிர்ச்சி!

தமிழக சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் கிடைக்கும்.

English summary
Rajya Sabha election in Tamil Nadu will be held on March 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X