தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு மார்ச் 26-ல் தேர்தல்!
டெல்லி: தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ந் தேதி முடிவடைகிறது. இதில் தமிழகத்தில் திருச்சி சிவா (திமுக), சசிகலா புஷ்பா (தற்போது பாஜக), விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ் (அதிமுக), ரங்கராஜன் (சிபிஎம்) ஆகியோரது பதவி காலமும் முடிவடைகிறது.
இதையடுத்து 55 எம்.பி.க்கள் காலி இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் மார்ச் 6-ல் தொடங்குகிறது.
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய மார்ச் 13-ந் தேதி கடைசிநாள். இதில் போட்டி இருந்தால் மார்ச் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாம விழுந்து விழுந்து கவனிச்சும்.. டொனால்ட் ட்ரம்ப்பின் பாகிஸ்தான் பாசத்தை பாருங்க.. அதிர்ச்சி!
தமிழக சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் கிடைக்கும்.