மாலத்தீவில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கும் இலங்கை பிரதமர் ரணில்
டெல்லி: மாலத்தீவில் நடைபெறும் இந்தியப் பெருங்கடல் நாடுகளின் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2019-ம் ஆண்டின் இந்திய பெருங்கடல் மாநாடு மாலத்தீவில் வரும் 3, 4 தேதிகளில் நடைபெற உள்ளது. மாலத்தீவு அதிபர், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இம்மாநாட்டில் பங்கேற்க உள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேச திட்டமிட்டுள்ளாராம். இலங்கையில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
தவறான நிர்வாகத்தால் பொருளாதாரம் படு வீழ்ச்சி.. மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் மன்மோகன் சிங்!
மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே அதிபர் தேர்த்லில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதேநேரத்தில் தற்போதைய அதிபர் மைத்திரியை மீண்டும் களம் இறக்குவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாலத்தீவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த பின்னர் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.