மோடி பற்றி டிரம்ப் சொன்ன ஒரு வார்த்தை.. இந்திய அமெரிக்க உறவில் வெடித்த சிக்கல்.. தொடர் சர்ச்சை!
பிரதமர் மோடி குறித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேச்சு காரணமாக தற்போது இந்திய அமெரிக்க உறவில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
டெல்லி: பிரதமர் மோடி குறித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேச்சு காரணமாக தற்போது இந்திய அமெரிக்க உறவில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் நடத்திய சந்திப்பு சர்ச்சையாகி உள்ளது. காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவும்படி தன்னிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் பேசிய டிரம்ப், பிரதமர் மோடி காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க தயாராக இருக்கிறார். காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவ வேண்டும் என்று அவர் என்னிடம் கோரிக்கை வைத்தார், என்று டிரம்ப் கூறினார்.
மீண்டும் அதிபராக உதவுங்கள்.. போற போக்கில் இம்ரான் கானிடம் பிட்டை போட்ட டொனால்ட் டிரம்ப்!
என்ன எதிர்ப்பு
டிரம்ப்பின் பேச்சுக்கு இந்திய வெளியுறவுத்துறை ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அதிபர் டிரம்ப்பிடம் அப்படி எதுவும் உதவி கேட்கவில்லை. மோடி உதவி கேட்டதாக டிரம்ப் கூறியது தவறானது. அதில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
என்ன போராட்டம்
இதனால் இந்தியர்கள் பலர் அமெரிக்க அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தவும் முடிவு செய்து இருக்கிறார்கள். நியூயார்க்கில் டிரம்ப்பின் கருத்திற்கு எதிராக போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. டிரம்ப் வெளியிட்ட கருத்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன பிரச்சனை
இன்று நாடாளுமன்றத்திலும் இதே பிரச்சனை காங்கிரஸ் கட்சி சார்பாக எழுப்பப்பட்டது. மோடி ஏன் டிரம்ப்பிடம் சென்று உதவி கேட்டார். இந்தியாவின் மானத்தை மோடி வாங்கிவிட்டார் என்று காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பப்பட்டது. இதற்கு பாஜக தரப்பில், மோடி டிரம்பிடம் உதவி கேட்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
என்ன சிக்கல்
இந்த பிரச்சனை காரணமாக தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா உறவில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒருவர் இந்திய பிரதமர் குறித்து இப்படி பேசுவது இதுவே முதல்முறையாகும். இதனால் இந்தியா அமெரிக்கா உறவில் இதனால் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை வைத்துக்கொண்டு டிரம்ப் இப்படி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.