இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்
டெல்லி: இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ராகேஷ்குமார் சிங் பதாரியா நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.கே.எஸ். பதாரியா வரும் 30-ந் தேதி விமானப் படை தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
இந்திய விமானப் படையில் தற்போது துணை தளபதியாக இருப்பவர் ராகேஷ்குமார் சிங் (ஆர்.கே.எஸ்) பதாரியா. 1980-ம் ஆண்டு விமானப் படையில் சேவையாற்றி வருகிறார் பதாரியா.
2017-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தென்னிந்திய விமான படை பிரிவின் கட்டளை தளபதியாக பணியாற்றினார் பதாரியா. 36 ஆண்டுகால விமானப் படை சேவையில் வாயு சேனா பதக்கம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு விமானப் படை துணை தளபதியாக பதாரியா நியமிக்கப்படார். தற்போது விமானப் படை தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments
English summary
Centre has decided to appoint Air Vice Chief Air Marshal RKS Bhadauria as the next Chief of the Air Staff.