ஆர்வக் கோளாறில் செல்பி.. இந்தியக் கொடிக்கு பதிலாக பராகுவே கொடியை பயன்படுத்தி சர்ச்சை கிளப்பிய வதேரா
டெல்லி: நாடாளுமன்றத்திற்கான 6-ஆவது கட்ட தேர்தலில் வாக்களித்த கையோடு பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வெளியிட்ட புகைப்படத்தில் இந்திய கொடிக்கு பதிலாக முதலில் பராகுவே நாட்டின் கொடியை பயன்படுத்திவிட்டு பின்னர் இந்திய கொடியை அவர் பயன்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நேற்றைய தினம் 6-ஆவது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்களும் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
டெல்லியில் லோதி எஸ்டேட்டில் சர்தார் பட்டேல் வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் கணவர் ராபர்ட் வதேராவுடன் பிரியங்கா காந்தி நேற்று வாக்களித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நம் நாட்டிற்காக ஜனநாயகத்தை காக்க நாம் போராடி வருகிறோம். அதை மனதில் கொண்டு நான் வாக்களித்தேன் என கூறினார்.
1980களில் மோடி இ- மெயில் அனுப்பினார்? டிஜிட்டல் கேமரா வெச்சிருந்தார்?.. ட்விட்டரில் 'தெறி'சர்ச்சை
நமது பலம்
இதையடுத்து வாக்களித்த பிறகு மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைவிரல் மையுடன் செல்பி புகைப்படத்தை டுவிட்டரில் ராபர்ட் வதேரா வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில் நமது உரிமையே நமது பலம்.
நாட்டின் கொடி
அனைவரும் வாக்களிக்க வேண்டும். நம் நாட்டின் மதசார்பின்மை, பாதுகாப்பு, ஆக்கப்பூர்வமான எதிர்காலம் ஆகியவற்றை ஏற்படுத்த எங்களுக்கு வாக்களியுங்கள் என குறிப்பிட்டிருந்தார். கூடவே ஆர்வக் கோளாறில் இந்திய கொடிக்கு பதிலாக பராகுவே நாட்டின் கொடியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
வதேரா
இந்திய கொடியில் காவி நிறம், வெள்ளை, பச்சை ஆகிய நிறத்தின் நடுவே அசோக சக்கரம் இருக்கும். பராகுவே நாட்டின் கொடியில் சிகப்பு, வெள்ளை, நீல நிறம் இடம் இருக்கும். இந்த கொடியைதான் வதேரா பயன்படுத்தியிருந்தார்.
|
இந்திய கொடி
பின்னர் தனது தவற்றை உணர்ந்த அவர் உடனடியாக அந்த கொடியை மாற்றிவிட்டு இந்திய கொடியை பயன்படுத்தியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.