எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்க திட்டம்.. ரூ. 1.5 லட்சம் வருமான வரிச்சலுகை! அதிரடி அறிவிப்பு!
டெல்லி: எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வருமான வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புக்கு பின்பு இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாசித்தார்.
அப்போது, எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வருமான வரியில் மாற்றமில்லை.. அப்படியும், 3 லட்சம் நீங்க கூடுதல் சலுகை பெற முடியும்! எப்படி தெரியுமா?
எலக்ட்ரிக் வாகனங்களுக்காக வாங்கிய கடன் மீதான வட்டியில், 1.5 லட்சம் வரை வருமான வரியில் தள்ளுபடி பெறலாம் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரி ரூ.1 உயர்த்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவித்தார். மேலும் ராணுவ தளவாட பொருட்களுக்கு கலால் வரி கிடையாது என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.