டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள்.. 2 நீதிபதிகள் எதிர்ப்பு.. அதிரடி காட்டிய சந்திரசூட், நாரிமன்!

சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை மறு ஆய்வு வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் !

    டெல்லி: சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனுக்களை கூடுதல் பெஞ்சிற்கு அனுப்ப 2 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்து தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    பெரும் எதிர்பார்பிற்கு இடையில் சபரிமலை வழக்கில் இன்று வித்தியாசமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தனது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

    இந்த தீர்ப்பிற்கு எதிராக 5 ரிட் பெட்டிஷன் உட்பட மொத்தம் 65 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் பாலி நாரிமன், ஏ எம் கான்வில்கர் , டி.ஒய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    மாற்றப்பட்டது

    மாற்றப்பட்டது

    அதன்படி சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் இந்த வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் மீது மீண்டும் விசாரணை நடக்க உள்ளது. சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனுக்களை கூடுதல் பெஞ்சிற்கு அனுப்ப 2 உச்ச நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்து தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    எதிர்ப்பு தெரிவித்ததனார்

    எதிர்ப்பு தெரிவித்ததனார்

    நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் பாலி நாரிமன் ஆகியோர் கூடுதல் பெஞ்சிற்கு வழக்கை மாற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இஸ்லாமியர்கள், பார்சிகள் தொடர்பான மனுக்கள் எதுவும் இந்த வழக்கில் விசாரிக்கப்படவில்லை. அதனால் அதை பற்றி இங்கு பேச கூடாது. கேரளா அரசு எல்லா மக்களையும் ஒன்றாக நடத்த நினைக்கிறது. பெண்களுக்கும் சம உரிமை வழங்க நினைக்கிறது. அதை நாம் மதிக்க வேண்டும் என்று நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

    நாரிமன்

    நாரிமன்

    அதேபோல் நீதிபதி பாலி நாரிமன், உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த வருடம் கொடுத்தே தீர்ப்பின் படியே நான் தீர்ப்பு வழங்குகிறேன். இந்த வழக்கை பெரிய அமர்விற்கு மாற்ற தேவை கிடையாது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து , மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று கூறினார்.

    மெஜாரிட்டி தீர்ப்பு

    மெஜாரிட்டி தீர்ப்பு

    மற்றப்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் ஏ எம் கான்வில்கர் ஆகிய 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் 3:2 என்ற கணக்கில் சபரிமலை மறுசீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது.

    English summary
    Sabarimala Case: 2 Judges dissent in the 5 bench verdict.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X