பாஜகவில் சேர போகிறேனா.. யார் சொன்னது.. அப்படியெல்லாம் ஒரு திட்டமும் இல்லை.. சச்சின் பைலட் ஓபன் டாக்!
டெல்லி: நான் பாஜகவில் சேர மாட்டேன் என்றும் நான் இன்னும் காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவே இருக்கிறேன் என்றும் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக அரசியல் களம் ஆட்டம் கண்டு வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டும் துணை முதல்வராக இரு்த சச்சின் பைலட்டிற்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது.
சரமாரி கேள்வி.. 2 நாள்தான் டைம்.. சச்சின் பைலட் மீது ஏவப்பட்ட தகுதிநீக்க அஸ்திரம்.. காங்கிரஸ் அதிரடி
காங்கிரஸ் கட்சி
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து நேற்று மீண்டும் நடந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ராஜஸ்தான் அமைச்சரவையிலிருந்தும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட்டை நீக்க முடிவு செய்யப்பட்டது.
ராஜஸ்தான்
மாநில கல்வித் துறை அமைச்சரான கோவிந்த் சிங் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து முதல்வர் அசோக் கெலாட், ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார். மேலும் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு முதல்வர் கெலாட் பரிந்துரைத்தார்.
பாஜகவில் இணைவார்
இந்த நிலையில் சச்சின் பைலட் டிவிட்டர் பதிவில் உண்மை ஒரு போதும் தோற்காது என்று குறிப்பிட்டுள்ளார். தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சச்சின் இன்று காலை பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
திட்டமே இல்லையே
இதுகுறித்து சச்சின் பைலட் கூறுகையில் நான் பாஜகவில் இணையமாட்டேன். நான் இன்னும் காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவே இருக்கிறேன். நான் பாஜகவில் சேரவில்லை. பாஜகவில் சேர எனக்கு எந்த திட்டமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என்னை பாஜகவுடன் இணைக்க முயற்சிப்பது காங்கிரஸ் தலைமையிடம் என்னை இழிவுப்படுத்த வைக்கும் முயற்சியாகும் என தெரிவித்துள்ளார்.