டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது இந்தியாவா? நேருவே பெரிய பலாத்கார குற்றவாளிதான்.. சாத்வி பிராச்சி கடும் விமர்சனம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவே மிகப் பெரிய பலாத்கார குற்றங்களை புரிபவர்தான் என சாமியாரும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இதற்கு அண்மையில் நடந்த உன்னவ் பெண் பலாத்காரம், தெலுங்கானா பெண் மருத்துவர் பலாத்காரம் ஆகியவையே எடுத்துக்காட்டாகும். இரு சம்பவங்களும் நாட்டையே உலுக்கின.

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை? ராஜ்நாத் விளக்கம்குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை? ராஜ்நாத் விளக்கம்

சுட்டுக் கொல்ல வேண்டும்

சுட்டுக் கொல்ல வேண்டும்

இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டுமானால் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுவோரை கோர்ட், கேஸ் என அழைத்து செல்லாமல் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மற்ற நாடுகள்

மற்ற நாடுகள்

இந்த நிலையில் சனிக்கிழமை ராகுல்காந்தி வயநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் உலகிலேயே இந்தியா அதிக பலாத்கார சம்பவங்களுக்கு பெயர் பெற்றுவிட்டது. இதை பார்த்து விட்டு தங்கள் மகள்களையும் சகோதரிகளையும் இந்தியாவால் பாதுகாக்க முடியாதது ஏன் என மற்ற நாடுகள் கேள்வி எழுப்புகின்றன.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த ஒரு எம்எல்ஏ பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளார். அது குறித்து பிரதமர் எவ்வித கருத்தையும் கூறவில்லை என்றார். இதற்கு சாமியார் சாத்வி பிராச்சி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்து

சர்ச்சைக்குரிய கருத்து

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில் இந்தியா ராமர், கிருஷ்ணர்களின் நாடு. ஜவஹர்லால் நேருவே மிகப் பெரிய பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டவர். இதற்கு ராகுல்காந்தி என்ன சொல்வார்? நம் நாட்டின் ராமர், கிருஷ்ணர் கலாசாரங்களை கெடுத்துவிட்டார் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். சாத்வி.

English summary
Vishwa Hindu Parishad (VHP) leader Sadhvi Prachi said the country's first Prime Minister Jawaharlal Nehru was the "biggest rapist".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X