டெல்லி எய்ம்ஸில் துப்பரவு தொழிலாளிக்கு முதல் தடுப்பூசி..மருத்துவமனை இயக்குனரும் தடுப்பூசி போட்டார்!
டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அந்த மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளிக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.
Recommended Video
எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியாவும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அந்த மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளிக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியாவும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சுகாதாரதரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தடுப்பூசி போடும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையம் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டு, அது தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.